இயேசு ஒருவரே மெய் மார்க்கத்தின் வழி

இயேசு மக்களை மீட்க வந்தார். மத்-11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். என்றார் இயேசு.

தீவிரவாதம், ரௌடித்தனம், கட்ட பஞ்சாயத்து, சில்மிஷம் செய்யும் இந்துத்துவா சகோதரர்களிடம் இதனை கேட்டுப் பாருங்கள். இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இரத்தமும் சதையும், கத்தியும், அருவாளும்தான். செம்மறி ஆட்டு கூட்டங்களை வழிநடத்திச் செல்கின்ற நல்ல மேய்ப்பர் இயேசுவை நம்பி ஒன்றன் பின் ஒன்றாகப்போய் சேர்ந்தவர்களை அப்பாவித்தனமானவர்களை கெடுப்பவர்கள் இவர்கள்.


உண்மை இப்படி இருக்க, அன்பும் அமைதியும் தராத இந்த தீவிர வெறியர்களின் ஏனைய மார்க்கங்களில் ஏன் முட்டாள்தனமாக கால்போன போக்கில் கிறிஸ்தவனாகிய நீ போகின்றாயா? ஆனால் ஒன்று, சகோதரனே நீ.... போ....! எவ்வளவுதூரம் முள்ளில் உதைப்பாய்? முள்ளில் உதைப்பது உனக்குத்தான் வேதனையைத்தரும். ஆகவே நீ போய் வா..... மதவெறியனே...!

வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினை அறுப்பான். அன்பு உருவத்தின் எச்சரிப்பினை உணராத மதம் எனும் தீவிரவாதத்தை விரும்புகின்றவனின் வெளி போலியான வேஷத்தின் முகத்திரையை உன் மனசாட்சி எடுத்துரைக்கும். சத்திய வேதம் அதனை வெளிப்படுத்தும்.

இது உண்மை. பகுத்தறிவுள்ள சுயமாக சிந்திக்க்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டிய சந்தேகம்தான் இது. விவிலியத்தை ஒருமுறை முழுமையாக படித்துப் பார்த்தால் உங்களது சந்தேகம் நீங்கும். அப்போது என் கருத்தை நீங்கள் இன்னும் அழுத்தமாக உறுதி செய்வீர்கள். ஆனால் எத்தனை பேர் விவிலியத்தை வேதாகமத்தை சரியாக படித்துள்ளனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். (மதவெறியனே, உனக்கும் சேர்த்துதான் சொல்கின்றேன்).

கிறிஸ்து இயேசு பிரான் எப்படிப்பட்டவர் என்றும் அவர் போதித்த போதனைகள் எத்தனை உண்மை என்றும் நீங்கள் அறிவீர்களா? எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களையும் மன்னித்து பாவ மன்னிப்பைக் கொடுக்க சிலுவையில் மரித்த அவருடைய உண்மையான வரலாற்றை நீங்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷ நூல்களில் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

மத்தேயு 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.உலகில் சமாதானத்தை கொண்டு வர நான் வந்து இருப்பதாக நினைக்க வேண்டாம். லூக்கா 12:51 - நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன். உனது போருக்கான வாளையே கொண்டுவந்தேன் என (யோனத்தான் என்ற புனைபெயருள்ள) உன்னையும் எச்சரிக்கிறார்.

குடும்பங்களை பிரிக்க, தந்தையும் மகனும், தாயும் மகளும், மருமகளும் மாமியாரும் என ஒருவருக்கொருவரை எதிராளிகளாக்க, மாத்யூ 10:35,36 பெற்றோரும் பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும், ஒருவரை ஒருவர் வெறுக்குமாறு செய்யவே வந்துள்ளேன். (இது அவர் செய்யாமலேயே நடைபெறக் கூடிய ஒன்றுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை ஏனென்றால் ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. லூக்கா 12:52,53. ஓரு மனிதன் தன் வாழ்க்கையை வெறுக்குமாறு செய்ய விரும்புகிறேன். எங்கும் எதிலும் சுயம் வெறுக்கப்படவேண்டுமே தவிர வேறெதுவித புரட்சி இயக்கமாக இருக்ககூடாது இவை அனைத்தும் ஏசுபிரான் உதிர்த்த முத்துக்கள். இதை அவரது சீடர்களும் மூன்று சுவிசேஷங்களில் உறுதி செய்துள்ளனர் ஆகவே (யோனத்தான் என்ற புனைபெயருள்ள) உன்னையும் எச்சரிக்கிறார். ஏனென்றால் பக்திவேஷம் போட்டு மதத் தீவிரவாதத்தை எடுத்து மக்களை கூறுகூறாக்க முயலுகின்ற உங்கள் மத்தியிலேயே இது தொடங்கும்.

மத்-11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். என்றார் இயேசு.

ஏசு அன்பை போதிக்க வந்தார். எனினும் அவர் உலகிலுள்ள வன்மத்தை எச்சரிக்கவும் செய்துள்ளார். லூக்-10:3 புறப்பட்டுப்போங்கள். ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். என கிருஸ்து நாதரின் வார்த்தையை நம்பி கடந்த 2000 ஆண்டுகளில் அவருடைய மெய் பக்தர்கள் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்த்தாலே தெரியும்.

எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் மெய் தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் அவரை விட்டு ஓடிவிட மாட்டார்கள். ஏனென்றால், யோவா-10:27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. விவிலியத்தில் கூறப்பட்ட இயேசுவின் வாக்குத்தத்தங்கள் உண்மையானவைகள்.

கிருஸ்துவ விவிலியத்தின் இயேசு கிறிஸ்துவை இந்த உலகம் நம்புகிறது. இங்கு உலகம் நம்பித்தான் ஆகவேண்டும். காரணம் அது அவருடைய நிஜ வாழக்கையை பிரதிபலிக்கின்றது. கிறிஸ்தவர்கள் வாழவேண்டிய செயற்படவேண்டிய வித்தினை சித்தரிக்கின்றது.

கடந்த 6000 ஆண்டுகளில் மதத்தின் பெயரால் உலகில் சிந்திய ரத்தம் அதிகம். ஆகவே தான் எல்லா மனிதரின் பாவத்திற்காகவும் கிறிஸ்து இயேசு ஒருவரே சிலுவையில் மொத்தமாக இரத்தம் சிந்திவிட்டார். இனி கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தத்தேவையில்லை.

வேறு புற மத தீவிரவாதிகள் தங்கள் மதத்தின் பெயரால் தன் சொந்த நலத்திற்காக, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகவும் எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற பேராசை காரணமாகவும் ஆயுதங்களை கைகளில் ஏந்துகிறார்கள். ‘பிதாவே இவர்களை மன்னியும்’. என்றார் இயேசு. கிறிஸ்தவர்களாகிய நாம் அவரை பிரதிபலிப்போம்.

1இரா-18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள். கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்@ பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.இன்று இந்து மத தீவிரவாதிகளின் பாகால் தெய்வமானால் அவனை பின்பற்றுங்கள். மெய்யான தெய்வமாகிய இயேசு தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள் என்பதை எச்சரிக்கவேண்டியது எனது கடமை.

இன்று உலகில் எங்கும் சச்சரவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இலங்கையில் இன மோதல்கள். இந்தியாவில் மத மோதல்கள். மேற்குலகில் நாட்டைக் கைப்பற்ற மோதல்கள். இப்படி இனம், மதம், நாடு, தொழில், பதவி, அந்தஸ்து பெற எங்கும் ச்ண்டை சச்சரவுகளை காணலாம். எங்கும் சிதறிவிட்ட குடும்பங்களை காண்கிறோம். இதற்கெல்லாம் பரிகாரமாகதான் சிலுவையில் இயேசு தொங்கினார்.

கிறிஸ்துதான் தெய்வம் என்று அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் அவருடைய பிள்ளைளாகி விடுகிறார்கள். அவர் மெய் மார்க்கத்ததை கற்பித்தவர். அவர் தீவிரவாதத்தை கற்பித்தவர் அல்ல. அவருடன் யூதாஸ்காரியோத்தைத் தவிர வேறு தீவிரவாதிகளும் அந்நாட்களில் இயேசுவுடன் இருந்ததில்லை.

சரி... இனி சரியான விடையை தேடி கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள்தான்.....

கடைசியாக நான் கூறவிரும்புவது
மெய் தெய்வத்தைக் கண்டுகொள்ள முற்படுவோர் பேறுபெற்றோர். பாக்கியவான்கள். முக்தியடைவார்கள். சொர்க்கம் செல்வார்கள். சுவனம் செல்வார்கள். ஆகவே தேடி கண்டுபிடியுங்கள். இருட்டில் அல்ல...... சத்திய வேதாகமம் தருகின்ற வெளிச்சத்திற்குள் வந்து.....! உங்களுக்கு இயேசு ஒருவர் மாத்திரமே சரியான வழிகாட்டி.... கிறிஸ்தவர்களாகிய சாதாரண மனிதர்களாகிய ஆடுகளாகிய நாங்கள் அல்ல.

சத்திய வேதாகமத்தைப் படியுங்கள். மெய் தெய்வம் இயேசு என்பதை உணருங்கள். அவரைப் பின்பற்றி வாழ முற்படுங்கள்.......!

யோனத்தான் (கிறிஸ்தவ பெயரில் இயங்கும் இந்து மதத் தீவிரவாதி) அவர்களின் தளத்தில் திரு குரு அவர்கள் எழுதியதான ஒரு கட்டுரையைக் கண்டதின் விளைவினால் ஏற்பட்ட ஒரு பதில் கட்டுரை இது

No comments: