கிறிஸ்து ஒருவரே மெய் மார்க்கத்தின் வழி

கிறிஸ்து ஒருவரே மெய் மார்க்கத்தின் வழி

இயேசு மக்களை மீட்க வந்தார்.

மத்-11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். என்றார் இயேசு.

உலகளாவிய சகோதரர்கள் நரகத்திற்குச் செல்லக்கூடாது என்றுதானே வேதாகமம் கூறுகின்றது. அதற்காக தானே கிறிஸ்து வந்தார்.
இதனை வேறு எந்த வேதாந்தங்களும் கூறமுடியாத இரட்சிப்பின் வழி இயேசு ஒருவர் தானே. அவர் மரித்தும் உயிர்த்தெழுந்தவர்.

இயேசு கிறிஸ்து அவரைப் பற்றி பேசுவதற்கான முழு அதிகாரமும் கிருஸ்தவர்கள், தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டு. புறஜாதியான் அவைகளை அறியான்.

கிறிஸ்து இயேசு பிரான் எப்படிப்பட்டவர் என்றும் அவர் போதித்த போதனைகள் எத்தனை உண்மை என்றும் நீங்கள் அறிவீர்களா? எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களையும் மன்னித்து பாவ மன்னிப்பைக் கொடுக்க சிலுவையில் மரித்த அவருடைய உண்மையான வரலாற்றை நீங்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷ நூல்களில் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

இயேசுவை ஏற்றுக்கொள்ளாத கிருஸ்துவன் மற்றும் புறஜாதியான் அவன் எவனாக இருந்தாலும் அவன் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும். மிருகங்களை போல் அங்கு நிரந்தரமாக வருக்கப்படவேண்டும். இதுவே உண்மை. இதனையே சத்தியம் என்கிறோம்.

யோவா-5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். யோவா-13:20 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் கிறிஸ்து இயேசு.

ஆகவே அவரை ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ அவர்களுக்கு மாத்திரமே மெய்யான சொர்க்கம், முக்தி, பரலோகம் கிடைக்கும். அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேருக்கும் மீளமுடியா நரகம் என்று ஒன்று உண்டு. அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. பரந்த சமய உலகிற்கு அளித்த முதல் கருத்தும், மூலக்கருத்தும் இதுவே.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்@ விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.என யோவான் 3ம் அதிகாரத்தில் இயேசு திட்டத்தெளிவாக கூறிவிட்டார்.

அவரை ஏற்றுக்கொண்டால் உனக்கு நித்திய ஜீவன், சொர்க்கம், பரலோகம், முக்தி, பெறுபேறு, சுவனம் கிடைக்கும். அவரை ஏற்றுக்கொள்ளாதவன் எவனோ அவருக்கு அது கிடைக்காது. அப்-4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை@ நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷ்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
சத்திய வேதாகமத்தைப் படியுங்கள். மெய் தெய்வம் இயேசு என்பதை உணருங்கள். அவரைப் பின்பற்றி வாழ முற்படுங்கள்.......!

யோனத்தான் (கிறிஸ்தவ பெயரில் இயங்கும் இந்து மதத் தீவிரவாதி) அவர்களின் தளத்தில் திரு குரு அவர்கள் எழுதியதான ஒரு கட்டுரையைக் கண்டதின் விளைவினால் ஏற்பட்ட ஒரு பதில் கட்டுரை இது.

No comments: